Last Updated : 17 Mar, 2015 09:48 AM

 

Published : 17 Mar 2015 09:48 AM
Last Updated : 17 Mar 2015 09:48 AM

உலகக் கோப்பை எங்களுக்குத்தான்: மிஸ்பா நம்பிக்கை

உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று அந்த அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் எதிர்கொள்ள இருக்கிறது. இது தொடர்பாக அவர் கூறியது:

கிரிக்கெட்டில் ஒரே நாளில் அனைத்தும் மாறிவிடும். கோப்பையை வெல்லும் உத்வேகம் எங்கள் அணியிடம் உள்ளது. எந்த அணிக்கும் ஆச்சரியம் அளிக்கு பந்து வீச்சு எங்களிடம் உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றாக வேண்டிய நெருக்கடி யுடன் விளையாடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளோம்.

எளிதாக வெற்றி பெற்று முன்னேறும் அணிகளைவிட கடுமையாக போராடி வெல்லும் அணிக்கு தான் நெருக்கடியை எதிர்கொள் ளும் அனுபவம் கிடைக்கும்.

அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்துள்ளது என்று மிஸ்பா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x