Published : 17 Mar 2015 09:42 AM
Last Updated : 17 Mar 2015 09:42 AM

பார்வையற்ற பட்டதாரிகள் 8-வது நாளாக போராட்டம்

பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 8-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. சமூக நலத்துறை அமைச்சருடன் 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து பார்வை யற்ற பட்டதாரிகளுக்கும் வேலை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு பார்வை யற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத் தினர் சென்னையில் கடந்த 9-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல் வேறு நிலைகளில் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்ற னர். 8-வது நாளான நேற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் அமைந் துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 7 பேர் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த அமைப் பின் மாநில பொதுச்செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட 9 பேர் நேற்று மதியம் தலைமைச் செயலகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை 2-வது முறையாக சந்தித்துப் பேசினர். அப்போது துறையின் செயலர் பி.எம்.பசீர் அகமது உடனிருந்தார்.

சந்திப்புக்குப் பிறகு நிருபர் களிடம் அசோக்குமார் கூறும் போது, “எங்கள் பிரச்சினைக்கு தீர்வே கிடையாதா என்று அமைச் சரிடம் கேட்டோம்.

எங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசிவிட்டு இன்று (நேற்று) மாலைக்குள் முடிவு சொல்வதாக அமைச்சர் உறுதியளித்தார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x