Published : 31 Mar 2015 09:28 AM
Last Updated : 31 Mar 2015 09:28 AM

பல்கலைக்கழக கட்டிடம் இடிந்து 5 பேர் பலியான விவகாரம்: சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கட்டுமான விபத்தில் உயிரிழந்த வர்களின் சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

மத்தியப் பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் விருந்தினர் மாளிகை போர்டிகோ கட்டுமானம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த மயிலாடு துறை சின்னசாமி, பட்டவர்த்தி குமார், ஒடிசா ஷமீர்குமார் ஷெட்டி, கிட்டு, உத்தரப்பிரதேசம் ராம்சுபாத் ஆகியோரின் உடல்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் வைக்கப்பட்டிருந்தன.

ஷமீர்குமார் ஷெட்டி, கிட்டு, ராம்சுபாத் ஆகியோரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டன. இந்நிலையில் மற்ற இருவரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த வர்களின் குடும்பத்தினரின் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர்.

அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x