Published : 11 Mar 2015 09:42 AM
Last Updated : 11 Mar 2015 09:42 AM

4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சிதம்பரம் சார்-ஆட்சியர் எம்.அரவிந்த் மாற்றப்பட்டு நிதித்துறை துணைச் செயலராக நியமிக்கப்படுகிறார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் இயக்குநர் எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர்-செயலராக பணியமர்த்தப்படுகிறார்.

திருப்பூர் சார்-ஆட்சியர் டாக்டர் கே.செந்தில்ராஜ் மாற்றப்பட்டு, ஓசூர் சார்-ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் சார்-ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) பணியமர்த்தப்படுகிறார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x