Published : 14 Mar 2015 10:24 AM
Last Updated : 14 Mar 2015 10:24 AM

எளாவூர் - சூளூர்பேட்டை இடையே ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி - சூளூர்பேட்டை ரயில் வழித்தடத்தில் உள்ள ஆரம்பாக்கம் - தடா இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்று (14ம் தேதி) முதல் 14 நாட்களுக்கு இந்த மார்க்கத்தில் இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதன்படி, சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை இடையே (வண்டி எண்.42409) காலை 8.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் சூளூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே (வண்டி எண். 42408) காலை 11.10 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் எளாவூர் - சூளூர்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x