Published : 21 Mar 2015 09:08 AM
Last Updated : 21 Mar 2015 09:08 AM
லேண்ட்லைன் மூலமாக குறுந்தகவல், ஆடியோ, வீடியோ ஆகிய சேவைகளைப் பெறும் வகையில் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்தி வருவதாக பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலக இயக்குநர் என்.கே.குப்தா கூறினார்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இணையம் சார்ந்த சேவை களை வழங்குவதற்காக தென்னிந்தியாவின் முதல் தகவல் மையத்தை சென் னையில் நேற்று தொடங்கியது. CtrlS என்ற தனியார் நிறு வனத்துடன் இணைந்து இது தொடங்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மையத்தை பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலக இயக்குநர் என்.கே.குப்தா தொடங்கி வைத்தார். செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சேவையின் தரம் மற்ற நிறுவனங்களைவிட அதிகமானது. இந்தியாவின் அத்தனை கிராமங்களிலும் பிஎஸ்என்எல் சேவைகளை பெற முடியும். இந்த சூழலில் தமிழகத்தில் பிஎஸ்என்எல் தகவல் மையத்தை அமைத் துள்ளோம். இதன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பயன்பெறும். இது ஃபைபர் முறையிலான தகவல் மையம் என்பதால் நூற்றுக் கணக்கான ஜிபிக்கள் அள வில் இணையச் சேவை வழங்க முடியும். இதற்காக ஆரம்பகால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் லேண்ட்லைன் பயன்பாட்டை அதிகரிக்க அடுத்த தலைமுறை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறோம்.
இணையம் வசதி யுடன் கூடிய அந்த திட்டம் மூலம், லேண்ட்லைனிலேயே குறுந்தகவல் அனுப்பு வது, ஆடியோ, வீடியோ சேவைகளை பயன்படுத் துவது, இணையச் சேவை களை பெறுவது ஆகிய வையும் சாத்தியமாகும். முதல்கட்டமாக 53 ஆயிரம் தொலைபேசி இணைப்புகள் அடுத்த தலைமுறை சேவைக்கு மாற்றப்பட உள் ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT