Published : 19 Feb 2015 11:07 AM
Last Updated : 19 Feb 2015 11:07 AM

வனக்கல்லூரி மாணவர் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனை

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் குறித்து பேசினர்.

அப்போது, பேரவையில் குறுக்கிட்டு பேசிய வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ‘‘மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளிடம் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x