Published : 11 Feb 2015 10:52 AM
Last Updated : 11 Feb 2015 10:52 AM

‘அனேகன்’ படத்துக்கு தடை கோரி வழக்கு

தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபைத் தலைவர் எஸ்.மாரிச்செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ திரைப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. படத்தில், வண்ணார் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. எனவே, அந்தப் படத்தை திரையிட தடை விதிக்கக் கோரியும், காட்சிகளை நீக்கக் கோரியும் பிப்.4-ல் மனு கொடுத்தேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பிப். 13-ல் அனேகன் படத்தை வெளி யிடத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x