Published : 05 Feb 2015 10:32 AM
Last Updated : 05 Feb 2015 10:32 AM
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள ஊடகப் பிரிவு தேர்தல் அதிகாரி திமுகவுக்கு அனுமதியளித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக மாணவரணி செயலாளர் கடலூர் இள.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பேஸ்புக், ட்விட்டர், இ-மெயில், உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ள விரும்புவதாக பிரச்சார ஊடக பிரிவு தேர்தல் அதிகாரியிடம் மனு செய்திருந்தோம். இந்நிலையில் தேர்தல் பிரச்சார ஊடக பிரிவு தேர்தல் அதிகாரி எங்கள் கோரிக்கைக்கு அனுமதியளித்துள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் பேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் உள்ளிட்டவை மூலம் திமுக மாணவரணியினர் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபடுவது, தெருமுனைப் பிரச்சாரம் செய்வது போன்ற பணிகளிலும் ஈடுபடவுள்ளோம்.
இவ்வாறு இள.புகழேந்தி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT