Published : 17 Feb 2015 10:49 AM
Last Updated : 17 Feb 2015 10:49 AM

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம்

அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஏலத்திற்கு எட்டு முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளன. அலைக்கற்றை ஏலம் வருகிற மார்ச் மாதம் 4 ம் தேதி தொடங்க உள்ளது. அதில் கலந்து கொள்ள ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் ஜியோ, யுனிநார் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் நேற்று விண்ணப்பித்துள்ளன.

ஏலத்தில் பங்குபெற விண் ணப்பம் செய்ய நேற்று கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முக்கிய நிறுவனங்களுக்கான லைசென்ஸ்கள் 2015-16 ம் ஆண்டோடு முடிவடைய உள்ளது. வீடியோகான் நிறுவனம் இந்த ஏலத்தில் பங்குபெற விண்ணப்பிக்கவில்லை.

இந்த ஏலத்தில் பங்கு பெற்று லைசென்ஸ் பெற்றால்தான் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவையைத் தொடர்ந்து அளிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x