Last Updated : 18 Feb, 2015 04:29 PM

 

Published : 18 Feb 2015 04:29 PM
Last Updated : 18 Feb 2015 04:29 PM

கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி. மீது நடவடிக்கை: பரிக்கர்

குஜராத் கடல் பகுதியில் இந்திய எல்லையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நுழைந்த பாக். படகு வெடிக்கச் செய்தது பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் இந்த சம்பவம் குறித்த தங்களது முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதில் மாற்றம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இதற்கிடையே கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி. லோஷாலி, பாக். படகை வெடிக்கச் செய்ய உத்தரவிட்டார் என்று பத்திரிகை செய்தி ஒன்று வெளிவந்தது. அதனை லோஷாலி மறுத்துள்ளார். அதாவது தான் கூறியது அந்தக் கூற்றிடச் சூழலிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

இது பற்றி மனோகர் பரிக்கர் கூறும்போது, “ஒழுங்கின்மைக்கான விவகாரம் இது. விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x