Published : 20 Feb 2015 10:46 AM
Last Updated : 20 Feb 2015 10:46 AM

இவரைத் தெரியுமா?- குல்தீப் சிங் திங்ரா

$ பெர்ஜெர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றவர்.

$ டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட தொழில் குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்.

$ தொழில்துறை மற்றும் பெயிண்ட் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

$ இங்கிலாந்து நிறுவனமான பெர்ஜர் பெயிண்ட்ஸ் 1923 இந்தியாவுக்கு வந்தது. பல உரிமையாளர்கள் மாற்றத்துக்கு பிறகு 1991 ல் இந்த நிறுவனத்தை வாங்கி இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பெயிண்ட் நிறுவனமாக மாற்றியவர்.

$ இந்தியாவில் 18 சதவீத சந்தையை வைத்துள்ள இந்த நிறுவனத்துக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதினோரு இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளது.

$ ஆண்டுக்கு 3.20 லட்சம் டன் உற்பத்தி செய்கிறது. அதை அடுத்த இரண்டு வருடங்களில் 5 லட்சம் டன் அளவுக்கு உயர்த்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

$ நிறுவனத்தின் வேகமான வளர்ச்சிக்குக் கையகப்படுத்துதல் தேவையாக இருக்கிறது. தரமான ஒன்றை கையகப்படுத்துவது எளிதானதல்ல. அதற்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x