Published : 24 Feb 2015 03:51 PM
Last Updated : 24 Feb 2015 03:51 PM

கச்சத் தீவை மீட்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்: பேரவையில் முதல்வர் உறுதி

மீனவர் பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வு காணும் வகை யில் கச்சத் தீவை மீட்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி யளித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உறுப் பினர்கள் பேசிய பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதிலளித்துப் பேசி னார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் போதெல் லாம், அவர்களை விடுவிக்க இடையறா முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மீனவர்களின் படகு களை விடுவிப்பதற்கு ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்துமாறு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பாக் ஜலசந்தியிலும், மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி பிரச்சினை இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படலாம் என்ப தால் இரு நாட்டு மீனவர்களி டையே வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி சென்னையில் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டுள் ளோம்.

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைவது, கச்சத் தீவு மீட்பு மட்டுமே என்ப தால் மத்திய அரசிடம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலி யுறுத்துவோம். கச்சத் தீவு பிரச் சினை தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் சாதகமாக தீர்ப்பை பெறு வோம் என்ற நம்பிக்கை எங் களுக்கு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x