Published : 07 Jan 2015 10:52 AM
Last Updated : 07 Jan 2015 10:52 AM

தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் வட கிழக்கு பருவ மழை முடிந்துவிட்டது. இத்துடன் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை குறைந்துவிட்டது. வெயில் அதிகரித்து வந்தாலும் தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 33.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை , கரூர் பரமத்தியில் 32 டிகிரி, சேலத்தில் 31.9டிகிரி, கன்னியாகுமரியில் 31.7 டிகிரி, திருச்சியில் 31.5 டிகிரி, அதிராம்பட்டினத்தில் 31.2 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x