Published : 20 Jan 2015 09:44 AM
Last Updated : 20 Jan 2015 09:44 AM

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரிப்பு: விலை குறையத் தொடங்கியது

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகை யின்போது குறைந்த காய்கறி வரத்து, இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பொங்கலையொட்டி கோயம் பேடு காய்கறி மார்க் கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகள் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறு மார்க்கெட்டுகளுக்கு போதிய அளவு காய்கறிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. காணும் பொங்கலன்று கோயம் பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு சார்பு காய்கறி விற்பனை நிலையமான பண்ணை பசுமைக் கடைகளுக்கும் பொங்கலையொட்டி 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. பொங்கலின்போது விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப தயாராக இருந்தபோதும், லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்குவோர் பொங்கலைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைவாக இருந்தது.

இது குறித்து மார்க்கெட் நிர்வாகக் குழு உறுப்பினர் தியாகராஜனிடம் கேட்டபோது, “பண்டிகை காலம் என்றாலே காய்கறி வரத்து சற்று குறைவாகத் தான் இருக்கும். இத னால் விலை சற்று உயரும். ஓரிரு நாட்களில் நிலைமை சீரடையும்” என்றார்.

காய்கறி வியாபாரி ஒருவர் கூறும்போது, “பொங்கல் நாட்களில் காய்கறிகள் வரத்து சற்று குறைவாக இருந் தது. பொங்கலுக்கு பிறகு நேற்று காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சற்று குறைந்துள்ளது. பொங்கலின்போது ரூ.80-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் தற்போது ரூ.60-க்கு விற்கப்படுகிறது, பீன்ஸ் ரூ.35-லிருந்து ரூ.30 ஆகவும், அவரைக்காய் ரூ.50-லிருந்து ரூ.30 ஆகவும், தக்காளி ரூ.20-லிருந்து ரூ.15 ஆகவும் குறைந்துள்ளது. இன்னும் வெங்காயம் வரத்து அதிகரிக்காததால் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு முன்பு வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஓரிரு தினங்களில் வழக்கமான காய்கறி வரத்து மற்றும் வழக்கமான விலை இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x