Published : 16 Oct 2014 03:43 PM
Last Updated : 16 Oct 2014 03:43 PM
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் தேசியக் கூட்டம் நடத்தி மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சி செய்வதாக ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு மீது சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மாநில அமைச்சரும், சமாஜ் வாதி செய்தித் தொடர்பாளருமான ராஜேந்தர் சௌத்ரி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஆர்.எஸ்.எஸ் நடத்தி வரும் `பிரதிநிதி காரியாக்காரி’ கூட்டத் தில் இங்கு மதக்கலவரங்களை எங்கு எப்படி நடத்துவது என திட்டமிடப்படுகிறது. இந்த விஷ யத்தில் அந்த அமைப்பினர் மிகவும் கைதேர்ந்தவர்கள் என்பதால், இரு சமுதாயத்தினர்களுக்கு இடையே கலவரத்தை தூண்ட முயல்கின்றனர் என்றார்.
பாஜகவின் உபி மாநில செய்தி தொடர்பாளர் விஜய் பகதூர் பாதக் ‘தி இந்து”விடம் கூறியதாவது: ஒரு மாநிலத்தின் அமைச்சராக வும், ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து கொண்டு மிகவும் பொறுப்பற்ற முறையில் அவர் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தால் இங்கு மதநல்லிணக்கம் கெடுவதாக அவரிடம் ஆதாரம் இருந்தால் அதை தடை செய்யாலாமே. இந்தக் கூட்டத்தை தடை செய்ய ஆளும் சமாஜ்வாதி முயற்சித்தால் அதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் சட்டரீதியான முயற்சிகளை பாஜக செய்யும். இவ்வாறு பாதக் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT