Published : 08 Oct 2014 03:01 PM
Last Updated : 08 Oct 2014 03:01 PM

நான்தான் காடு

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே!



நாட்டில் ஓடும் நதிகளை - கொடுப்பதும்

நான்தானே நான்தானே

காவியம் சொல்லும் காகிதம் – கொடுப்பதும்

நான்தானே நான்தானே!



மண்ணின் வளத்தை உயர்த்தி – கொடுப்பதும்

நான்தானே நான்தானே

மழையை மண்ணில் நிற்கச் – செய்வதும்

நான்தானே நான்தானே!



உயிரைக் காக்கும் மூலிகை – கொடுப்பதும்

நான்தானே நான்தானே

உயிர் கோளத்தில் காப்பது – உன்னை

நான்தானே நான்தானே!



நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே

நான்தானே நான்தானே

காடு என்பது நான்தானே!



- மொ.பாண்டியராஜன் மதுரை.3

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x