Published : 23 Sep 2014 09:13 AM
Last Updated : 23 Sep 2014 09:13 AM

3 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ஈரோடு மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக அரசு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் மாற்றப்பட்டு, மின் ஆளுமை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். அவர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்.

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சி இயக்குனராக பணிய மர்த்தப்படுகிறார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் மாற்றப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனர் எஸ்.பிரபாகரன் இடமாற்றம் செய்யப்பட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் பி.செந்தில்குமார் மாற்றப்பட்டு, சேலம் பட்டு வளர்ப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x