Published : 22 Apr 2015 09:45 PM
Last Updated : 22 Apr 2015 09:45 PM
புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு புகார் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011-ல் அதிமுக அரசு பொறுப்பேற்றதும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டார்.
மேலும், கட்டிட பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT