Last Updated : 02 Feb, 2015 04:28 PM

 

Published : 02 Feb 2015 04:28 PM
Last Updated : 02 Feb 2015 04:28 PM

இந்திய அணியிடம் அனுபவம் இல்லை, போராட்ட குணம் உள்ளது: கபில் தேவ்

தற்போதைய உலகக்கோப்பை இந்திய அணியிடத்தில் அனுபவம் இல்லாவிட்டாலும் போராடும் குணம் உள்ளது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

2011- உலகக்கோப்பையை வென்ற அணியுடன் ஒப்பிட்டால் இந்த அணியில் அனுபவம் இல்லை என்று கூறலாம் ஆனால் போராட்ட குணம் உள்ளது என்று கூற முடியும் என்று கபில் தேவ் கூறுகிறார்.

இந்திய உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங், சேவாக், கம்பீர் ஆகியோரைத் தேர்வு செய்யாதது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் கபில் இவ்வாறு கூறியுள்ளார்.

“2011 உலகக்கோப்பையை வென்ற அணியுடன் இந்த அணியை ஒப்பு நோக்குககையில் சில பெரிய வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை என்று புரிகிறது, இந்த அணியின் அனுபவம் குறைவு, ஆனால் இந்த அணியிடத்தில் ஆற்றல் மற்றும் உற்சாகத்துக்கு குறைவில்லை. போராட்டக்குணம் உள்ளது, இது அவர்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் என்று நம்புவோம்.

ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும், கடமை உணர்வுடன் இறங்க வேண்டும், அதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.” என்று கபில் தேவ் நியூஸ்24 கிரிக்கெட் கருத்தரங்கில் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x