Published : 20 Nov 2014 10:09 AM
Last Updated : 20 Nov 2014 10:09 AM
ஐசிசி தலைவர் என். சீனிவாசனுக்கு ஆதரவாக முத்கல் கமிட்டி தெரிவித்த கருத்தால், மும்பை, விதர்பா, பஞ்சாப் கிரிக்கெட் சங்கங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த மூன்று அமைப்புகளுக்கும் பிசிசிஐ அபராதம் விதிக்கும் என்று தகவல் வெளியா கியுள்ளது.
முத்கல் கமிட்டி, ஐசிசி தலைவர் என். சீனிவாசனுக்கு சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங்கில் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பை, விதர்பா, பஞ்சாப் கிரிக்கெட் சங்கங்கள் மீது பிசிசிஐயின் பார்வை திரும்பி யுள்ளது.
பிஹார் கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ஆதித்ய வர்மா சீனிவாசனுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். மும்பை, விதர்பா, பஞ்சாப் கிரிக்கெட் சங்கங்களைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போ தைய தலைமை நிர்வாகிகள், அந்த வழக்குக்கு ஆதரவான நிலை எடுத்ததாகத் தெரிகிறது.
இதனால் சீனிவாசன் வழக்கு தொடர்பாக பிசிசிஐக்கு ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட இந்த 3 அமைப்புகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT