Published : 02 Aug 2014 09:37 AM
Last Updated : 02 Aug 2014 09:37 AM

முதல்வர் பற்றிய விமர்சனம்: மீனவப் பிரதிநிதிகள் கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினைகுறித்து எடுக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தின்பேரால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் ஆகும்.

இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியைப் பற்றி அவதூறாக விமர்சித்து கட்டுரையும், கருத்துப் படமும் வெளியிட்டுள்ளனர். இலங்கையின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தார்கள்.

இது குறித்து தேசிய மீனவர் பேரவை தலைவர், இளங்கோ கூறியதாவது:

’’இலங்கை அரசின் பாது காப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினையைக் குறிப்பிட்டு எழுதும்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சனம் செய்துள்ளதை கடுமையாக எங்கள் அமைப்பின் சார்பாக எதிர்க்கிறோம்.

இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சினை சுமுகமாக தீரவேண் டும் , இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்று மீனவ சமுதாயத்தின் மீது பேரன்பு கொண்டவராக தமிழக முதல்வர் பிரச்சினையை அணுகி வருகிறார்.

ஆனால், தமிழக முதல்வரின் செயலை கொச்சைப்படுத்தியுள்ள இலங்கையின் செயல் அதிர்ச்சி அளிக்கின்றது. இத்தகைய செயல், இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினை சுமுகமாக தீர்ந்து விடக்கூடாது என்று எண்ணும் தீய சக்திகளின் சதிச் செயலாகும். இலங்கை அரசு, இத்தகைய அநாகரிக செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

அப்பாவி மீனவர்கள் விடுதலை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் பேசிய தாவது:

’’இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவ தூறாக வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீனவர் பிரச்சினைகுறித்து எடுக்கக் கூடிய ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த விருப்பத்தின்பேரால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் ஆகும். ஆனால் இந்திய, இலங்கை தமிழ் மீனவர்களின் அணுகுமுறையில் முரண்பட்ட கருத்துக்களை கூறி இரு நாட்டு மீனவர்களின் சுமுக உறவுகளை இலங்கை அரசு பிரிக்க கூடாது.

மேலும் இலங்கை அரசின் ஆலோசனைகளை கேட்டு ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் நரேந்திர மோடிக்கு இல்லை, எனவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x