’போக்ஸா' இருந்தும் போதிய விழிப்புணர்வு இல்லை  - குழந்தைகளைக் காக்கும் ‘ஆய்த சிறகு’

’போக்ஸா' இருந்தும் போதிய விழிப்புணர்வு இல்லை  - குழந்தைகளைக் காக்கும் ‘ஆய்த சிறகு’

க.விக்னேஷ்வரன்

மதுரையில் உள்ள அந்தத் தனியார் பள்ளியின் அரங்கம், பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் நிரம்பியிருந்தது. குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மேடையில் இருப்பவர்கள் பேசப் பேச, அனைவரின் முகங்களும் அதிர்ச்சியில் உறைகிறது. முழுக்க முழுக்க இளைஞர்களால் நடத்தப்படும் ‘ஆய்த சிறகு' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது.

பெற்றோர்களுக்கான வகுப்பு முடிந்ததும், குழந்தைகளுக்கான வகுப்பு. தங்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதை ஆட்டம் பாட்டத்துடன் குழந்தைகளுக்கு நாசூக்காகச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து விரிவாகவும் வெளிப்படையாகவும் பேசும் களமாக அந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்த அமைப்பின் உறுப்பினர்களில் பலர் தங்களுடைய குழந்தைப் பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் என்பது பெரும் சோகம். தங்களுக்கு நேர்ந்த கொடுமை மற்ற குழந்தைகளுக்குத் தொடரக் கூடாது எனும் உறுதியுடன் இதை முன்னெடுக்கிறார்கள் இந்த இளம் நண்பர்கள். நேரம் கேட்டு வாங்கிக்கொண்டு ‘ஆய்த சிறகு’ அணியை மதுரை ‘ஈகோ பார்க்’கில் சந்தித்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in