ரஜினியின் அதிரடி அன்பில் நெகிழ்ந்துபோனேன்!- ‘சாணக்யா' விருதுபெற்ற குமரி அனந்தன் பேட்டி

ரஜினியின் அதிரடி அன்பில் நெகிழ்ந்துபோனேன்!- ‘சாணக்யா' விருதுபெற்ற குமரி அனந்தன் பேட்டி

கே.சோபியா
readers@kamadenu.in

வலதுசாரிப் பத்திரிகையாளராக அறியப்படும் பாண்டே நடத்திவரும் ‘சாணக்யா’ இணையதள சேனலின் சார்பில், ‘எளிமையான அரசியல்வாதி’ விருதை, ரஜினிகாந்த் கையால் பெற்றிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன். காங்கிரஸ்காரர்களே பெரிய அளவில் கொண்டாடாத குமரி அனந்தனின் காலில் ரஜினி விழுந்ததையும், அவரைப் புகழ்ந்து பேசியதையும் பார்த்து ரஜினி ரசிகர்களே அதிசயித்துப் போனார்கள். விருது பெற்ற களிப்பில் இருக்கும் குமரி அனந்தனுடன் ஒரு பேட்டி:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுமேடையில் ஒரு விருது, அதுவும் ரஜினி கையால் பெற்ற உணர்வு எப்படியிருந்தது?

ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமில்லாமல், எல்லாருக்கும் பொதுவானவன் என்கிற பெருமையை இலக்கியமும், தமிழும் எனக்குக் கொடுத்திருக்கின்றன. அதேபோல யார், எவர் என்று பார்க்காமல் அவர் ஆற்றிய தொண்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்து விருது வழங்கியிருக்கிறது ‘சாணக்யா’.அதற்காக, அவர்களுக்கு எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in