3  கோடி  வரி பாக்கி வெச்சிருக்கேன்... அப்ப நான் விவிஐபி தானே?-  ‘தா(த்)தா’ வரிச்சியூர் செல்வம் தடாலடி பேட்டி!

3  கோடி  வரி பாக்கி வெச்சிருக்கேன்... அப்ப நான் விவிஐபி தானே?-  ‘தா(த்)தா’ வரிச்சியூர் செல்வம் தடாலடி பேட்டி!

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

வரிச்சியூர் செல்வம்! பேரைக்கேட்டாலே மதுரை சும்மா அதிரும் (பயத்திலா, சிரிப்பிலான்னு கேட்கக்கூடாது). ‘பார்ன் வித் சூரிக்கத்தி' என்று அவரது ஆட்கள் மிரட்டலாகச் சொல்வார்கள். போலீஸ் தரப்பிலோ, “ஜிகர்தண்டா அசால்ட் சேது பாதி, ‘தலைநகரம்' நாய் சேகர் பாதி கலந்து செய்த கலவை நான்னு பாடத் தகுதியான ஆளு சார் அவன்” என்பார்கள். கலரிங் செய்த தாடி, ‘பாபா' ரஜினி மாதிரி வண்ணத் தலைப்பாகை, ஹாஸ்ட்லி கூலிங்கிளாஸ், சினிமா ஆசையுடன் வலம் வரும் வரிச்சியூரார், காஞ்சி அத்திவரதரின் அருளால் பட அறிவிப்பு வெளியாகும் முன்பே உலக பிரபலமாகிவிட்டார். அத்திவரதரைவிட அதிக நகைகளுடன், அவர் தரிசனம் செய்த காட்சியைப் பார்த்துவிட்டு என்கவுன்டரில் தேடப்பட்ட ரவுடிக்கு விவிஐபி தரிசனமா என்று பொங்கிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அவரை ஒரு பேட்டி காணலாமே என்று அலுவலகத்தில் இருந்து ஐடியா வர, ஆறுமுட்டையில் முடியும் அவரது ஃபேன்ஸி எண்ணைத் தொடர்பு கொண்டேன். வேறு யாரோ எடுத்தார்கள். பிறகு, அங்கே இங்கே தேடி ஒருவழியாக வரிச்சியூர் செல்வத்தைப் பிடித்தேன். “அண்ணாநகருக்கு வந்துட்டு கால் பண்ணுங்க. எங்க இருக்கேன்னு சொல்றேன்” என்று புதிர் போட்டவர், கை, கால், கழுத்து, காது என்று உடல் முழுக்க தங்க நகைகளுடன்  நடமாடும் நகைக்கடையாக நமக்காக கெஎஃப்சி-யில் காத்திருந்தார்.

என்ன திடீர்னு அத்திவரதர் தரிசனம்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in