சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) வளாகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயிலும் மாணவர்கள் பலர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கரோனா தொற்றின் பிடியிலிருந்து உலகம் முழுமையாக வெளிவராத சூழலில், கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தபோதே பலரிடமும் எழுந்த அச்சம், இன்றைக்கு நிதர்சனமாகிவிட்டது.