பறிபோன உயிர்கள்... பரிதவித்த உறவுகள்!- ஆபத்தில் முடிந்த ஆன்மிகச் சுற்றுலா

பறிபோன உயிர்கள்... பரிதவித்த உறவுகள்!- ஆபத்தில் முடிந்த ஆன்மிகச் சுற்றுலா

கா.சு.வேலாயுதன்

வட மாநிலங்களுக்கு ரயிலில் ஆன்மிகச் சுற்றுலா சென்ற தமிழர்கள் 5 பேர், சுட்டெரிக்கும் வெயிலுக்குப் பலியான சோகம் நெஞ்சை உலுக்குகிறது.

பலியான அனைவரும் கோவை, ஊட்டியைச் சேர்ந்தவர்கள். கடும் கோடைகாலத்தில் ஆன்மிகச் சுற்றுலா சென்றதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அரசு நிர்வாகத்தின் அலட்சியம், தனி மனிதப் பேராசை என்று பல காரணங்களும் இதன் பின்னே இருப்பதாகச் சொல்கிறார்கள் பலியானவர்களின் உறவினர்கள். அதைவிட, இறந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துவருவதில் அவர்கள் பட்ட சிரமங்களைக் கேட்டால் கண்ணீரே வருகிறது.

உயிரிழந்தவர்களில் ஒருவரான 56 வயது கலாதேவி, கோவை ஒண்டிப்புதூர் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர். கணவருடன் இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் இருந்த கலாதேவி வெயில் கொடுமையில் திடீரென மயக்கமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மொழி தெரியாத அந்த ஊரில் அவரது கணவர் பட்ட சிரமமும், மரணமடைந்த கலாதேவியின் உடலைக் கொண்டுவருவதில் அவர்களது மகன் ஜெயக்குமார் பட்ட சிரமமும் சொல்லி மாளாதவை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in