“இனி நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம்”- உறுதியளித்த உறவுகள்... உற்சாகத்தில் சசிகலா!

“இனி நாங்கள் குறுக்கே நிற்கமாட்டோம்”- உறுதியளித்த உறவுகள்... உற்சாகத்தில் சசிகலா!

கரு.முத்து
muthu.k@kamadenu.in

சிறைமீண்டு சென்னை திரும்பியிருக்கும் சசிகலாவுக்கு எத்தனையோ சவால்கள் காத்திருக்கின்றன. இவற்றுக்கு இடையில், எந்த வகையிலும் இடைஞ்சலாக இருக்கமாட்டோம் என்று அவரது உறவுகள் உத்தரவாதம் அளித்திருப்பதால், பழைய உற்சாகத்துடன் இயங்கத் தொடங்கியிருக்கிறார் சசிகலா.

ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதுவரை அவரால் விலக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் உறவுகள் அனைத்தும் சசிகலாவைச் சூழ்ந்து கொண்டன. மருத்துவமனையில் ஒரு தளமே அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கூடவே, கட்சியும் மன்னார்குடி குடும்பத்தின் பிடிக்குள் வந்தது. ஜெயலலிதா மறைந்தபோது அவரின் உடலைச் சுற்றி சசிகலாவின் உறவுக்கூட்டம் நின்றதைப் பார்த்துப் பலரும் முகம் சுளித்தனர். சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கிய உறவுகள், முதல்வர் நாற்காலியை நோக்கியும் அவரை அவசர அவசரமாக இழுத்துச் சென்றன.

உறவுகளுக்குள் விழுந்த விரிசல்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in