ஓடந்துறை சண்முகம் சறுக்கிய கதை!- உள்ளாட்சியில் இப்படியும் ஒரு விநோதம்

ஓடந்துறை சண்முகம் சறுக்கிய கதை!- உள்ளாட்சியில் இப்படியும் ஒரு விநோதம்

ரோகிணி
readers@kamadenu.in

தேர்தலைப் பொறுத்தவரை வெற்றியாளர்களே பேசப்படுவார்கள் என்பதற்கு மாறாக, ஊராட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததன் மூலம் உலகத் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறார் ஓடந்துறை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சண்முகம்.
‘850 வீடுகளை இலவசமாகக் கட்டிக்கொடுத்து இந்தியாவின் சிறந்த பஞ்சாயத்து விருது வாங்கிய ஓடந்துறை சண்முகம், திமுக வேட்பாளரிடம் தோல்வி.

மாற வேண்டியது மக்களா, தலைவர்களா?’ என்று வாட்ஸ்-அப் பதிவுகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

மேட்டுப்பாளையம் அருகில் நீலகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ளது ஓடந்துறை ஊராட்சி. இது கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை, பிரபலமான ‘பிளாக் தண்டர்’ போன்றவற்றை உள்ளடக்கிய ஊராட்சி. இதன் தலைவராக சண்முகமும், இவரது மனைவியும் தலா 20 ஆண்டுகள் பதவி வகித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in