மரணத்தாலும் பிரிக்க முடியாத நட்பு!- அரியலூரை கலங்கவைத்த அரிய நண்பர்கள்

மரணத்தாலும் பிரிக்க முடியாத நட்பு!- அரியலூரை கலங்கவைத்த அரிய நண்பர்கள்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

அறியாத வயதில் நட்பில் கரம் கோத்து, அறுபதாண்டுகளுக்கும் மேலாக உயிர்த் தோழர்களாக வாழ்ந்துவந்த நண்பர்கள் இருவர், மரணத்தின் போதும் இணைபிரியாமல் அடுத்தடுத்து இவ்வுலகைவிட்டு விடைபெற்றிருக்கிறார்கள். ஒருவர் இந்து, மற்றொருவர் இஸ்லாமியர் என்பது இதில் நெகிழவைக்கும் மற்றொரு அம்சம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயில் பூசாரியாக இருந்தவர் மகாலிங்கம்(72). அங்கு இவரது குடும்பத்தினர் டீக்கடை ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இவர்களது வீட்டின் எதிரில் வசித்தவர் ஜெய்லாபுதின் (68). இவர் ரைஸ் மில் நடத்திவந்தார். 

இருவரும் இதே தெருவில் பிறந்து வளர்ந்தவர்கள். சிறுவயது முதலே இருவரும் நண்பர்கள். ஓடியாடி விளையாடியது, ஒன்றாகப் படிக்கப்போனது, இளைஞர்களாக ஊர் சுற்றியது, அடிதடி, வம்பு வழக்கு, ஒருவருக்கொருவர் திருமணத்தின்போது உதவியது, குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் உதவிக்கொள்வது என இவர்கள் இருவரும் சுமார் 60 வருடங்களாக இணைபிரியாமல் இருந்து வந்தனர். பேரன், பேத்திகளுக்குத் திருமணங்கள் நடந்து கொள்ளுப்பேரன்கள் எடுத்துவிட்ட நிலையிலும் இருவரும் மாறாத நட்பில் இருந்தார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in