அண்ணாவைப் போல எழுதிப் பார்ப்பேன்- வசந்த காலத்துக்குக் காத்திருக்கும் ஒரு வாழைப்பழ வியாபாரி!

அண்ணாவைப் போல எழுதிப் பார்ப்பேன்-  வசந்த காலத்துக்குக் காத்திருக்கும் ஒரு வாழைப்பழ வியாபாரி!

கரு.முத்து

துறையூர் - திருச்சி பிரதான சாலையில் வட்டாட்சியர் அலுவலகம், தீயணை நிலையம், சுற்றுலா மாளிகை உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இருக்கின்றன. இந்த ஏரியாவைச் சுற்றிச் சுற்றி உருள்கிறது அந்த தள்ளுவண்டி. செவ்வாழை, கற்பூரவள்ளி, பச்சைநாடா, ரஸ்தாளி என வாழைப்பழங்களால் நிரம்பிய அந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு வருகிறார் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட முருகேசன்.

வாடிக்கையாகப் பழம் வாங்குபவர்கள், விலையைக்கூட கேட்காமல் பழத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு பணத்தை முருகேசன் கையில் திணித்துவிட்டுப் போகிறார்கள். புதிதாய் வருகிறவர்களுக்கு விலை சொல்லிக் கொண்டிருக்கும்போதே முருகேசனுக்கு மனதுக்குள் ஏதோ உதிக்கிறது. பக்கத்தில் நிற்கும் மனைவியிடம், “கலா வண்டிய கொஞ்சம் பாத்துக்க...” என்று சொல்லிவிட்டு அருகில் கிடக்கும் இரும்பு நாற்காலியில் அமர்கிறார்.

ஒரு பழைய பாலித்தீன் பையிலிருந்து பரீட்சை அட்டையையும் ஒரு ரூபாய் பேனாவையும் எடுக்கும் அவர், வெள்ளைத் தாள்களை எடுத்து க்ளிப்பில் செருகிக்கொண்டு சரசரவென எண்ண ஓட்டத்தை எழுத ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள்... அவரது ஏட்டில் அழகாய் ஒரு சிறுகதை பிரசவித்து பெயர்வைக்கச் சொல்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in