அபிநந்தன் வந்துவிட்டார்… இவர்கள்..? 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய போர்க் கைதிகளின் நிலை என்ன?

அபிநந்தன் வந்துவிட்டார்… இவர்கள்..? 48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்திய போர்க் கைதிகளின் நிலை என்ன?

ஆர்.ஷபிமுன்னா

பாகிஸ்தானிடம் சமீபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானி அபிநந்தன் அடுத்த 60 மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால், 1971-ல் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் அவர்களிடம் சிக்கிய நமது 54 போர்வீரர்களின் நிலை என்னவாயிற்று என்பதுதான் இன்னும் தெரியவில்லை. இவர்களை மீட்பதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளின் அரசுகளும் அக்கறை காட்டவில்லை என்பதுதான் உண்மை.

வங்கதேசம் தனிநாடாக உருவானதன் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே மூண்ட போர் உள்ளது. இந்தப் போரில் இந்தியாவின் 54 போர்க்கைதிகள் பாகிஸ்தானிடம் சிக்கினர். போர் முடிந்து 48 வருடங்கள் ஆயிற்று. அந்தப் போரில் இரு நாட்டுத் தரப்பிலும் உயிர் துறந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் இந்தியத் தரப்பில் 54 பேர் தம் வசம் போர்க்கைதிகளாக இருப்பதை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ளாமலே இருந்தது. இந்திய அரசும் தமது 54 வீரர்களை மறந்து போனது. இவர்களில் தற்போது உயிருடன் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதும் தெரியவில்லை. சிறைவாசத்தின்போது உயிரிழந்தவர்களுக்குப் பதில் அவர்களின் அஸ்திதான் பாகிஸ்தான் சிறைகளில் தற்போது குவளைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த 54 போர்க் கைதிகளும் இந்தியாவின் பஞ்சாப், ஹரியாணா, உபி, டெல்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களை மீட்பதற்காக, ‘காணாமல் போன போர்க் கைதிகளின் குடும்பத்தினர் சங்கம்’ என்ற பெயரில் 1994-ல் ஒரு அமைப்பும் தொடங்கப்பட்டது. இதைத் தொடங்கிய 54 குடும்பத்தினரும் தொடர்ந்து இரு நாட்டு அரசுகளிடமும் போராடி ஓய்ந்துவிட்டனர். இதன் உறுப்பினர்களால் அவ்வப்போது வெளியான சில உண்மைச் சம்பவங்கள்தான் நம் மனசாட்சியின் மீது சுத்தியல் அடியாக விழுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in