கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
ஆன்மநெறி சிந்தனை வழியே பக்திநெறியை வளர்த்து வாழ்க்கையில் அமைதியையும் அன்பையும் தழைக்கச் செய்த ஞானிகளுள் ஒருவர் ராமானுஜர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமத்துவத்தை போதித்தாலும், ராமானுஜர் தாம் சென்ற இடமெல்லாம், தேவையற்ற சமுதாய கட்டுப்பாட்டை, மூடப் பழக்கவழக்கங்களை உடைத்தெறிய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்தார். மேலும், பல சமுதாய சீர்திருத்தங்களையும் செயல்படுத்தினார்.