உருமாறிய கரோனா வைரஸ் அபாயத்துக்கு நடுவே, இன்னொரு பதற்றத்தைக் கிளப்பியிருக்கிறது பறவைக் காய்ச்சல். இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, கேரளத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இது தமிழகத்துக்கும் பரவக்கூடும் என்பதுதான் இந்தப் பதற்றத்தின் பின்னணி.