சூழ்ச்சி வலையிலிருந்து இறைவன் அருளால் மீண்டிருக்கிறார் ரஜினி!- பாலபிரஜாதிபதி அடிகளார் பளிச்

சூழ்ச்சி வலையிலிருந்து இறைவன் அருளால் மீண்டிருக்கிறார் ரஜினி!- பாலபிரஜாதிபதி அடிகளார் பளிச்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

ஆன்மிகத்தையும் கடந்து தன் மனதுக்குப் பட்டதைப் பளிச்சென பேசுபவர் பாலபிரஜாதிபதி அடிகளார். அய்யா வழி சமயத் தலைவரான இவர், தமிழகத்தில் சமூகநீதி பேசும் ஆன்மிகவாதிகளில் முக்கியமானவர். எனவே, அவரது பேச்சில் எப்போதும் அரசியல் விமர்சனமும் கலந்திருக்கும். சாமித்தோப்பில் வசிக்கும் பாலபிரஜாதிபதியை அவரது இல்லத்தில், ‘காமதேனு’ மின்னிதழுக்காகச் சந்தித்தேன். அவரிடம் பேசியதிலிருந்து...

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாததால் தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியிருப்பதாக உணர்கிறீர்களா?

வெற்றிடம் என்பதே வெட்டிப்பேச்சு. வரலாற்றில் எப்போதுமே வெற்றிடம் இருக்காது. மகாத்மா காந்தி உயிர் இழந்ததும் வெற்றிடம் வந்ததா? வெற்றிடம் நிரம்ப கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். யார் வந்தாலும், போனாலும் உலகம் இயங்கும். படித்தவர்களும், சிந்தனையாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றிடத்தை நிரப்புபவர்கள் உருவாவார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in