இணைய உலகம்!

இணைய உலகம்!

தொகுப்பு: தேவா

அஸ்ஸாம் போலீஸின் அதிரடி நையாண்டி!

அஸ்ஸாம் போலீஸ் சமீபத்தில் 590 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றியது. அங்கு இது அடிக்கடி நடப்பதுதான் என்றாலும் இந்த முறை போலீஸ் செய்த செயல்தான் இணையத்தில் கடந்த வாரத்தில் அதிக வைரலானது. 590 கிலோ கஞ்சாவை புகைப்படம் எடுத்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, `590 கிலோ கஞ்சாவைத் தொலைத்தவர்கள் கவலைப்படவோ பதற்றப்படவோ வேண்டாம். நாங்கள் பத்திரமாக வைத்திருக்கிறோம். வந்து தகவல் தெரிவித்தால் சேவை செய்ய காத்திருக்கிறோம்' என்று நாசூக்காகப் பதிவிட்டிருக்கிறார்கள். நக்கல் நையாண்டி கலந்த இந்தப் பதிவு ட்விட்டரில் பரவலாக வரவேற்பை பெற்றதோடு வைரலும் ஆனது.

ஏற்கெனவே ட்விட்டரில் பல்வேறு விழிப்புணர்வு விஷயங்களைச் செய்து வரும் அஸ்ஸாம் போலீஸ், சமூக வலைதளத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதில் பிற மாநில காவல்துறைக்கு  முன்னோடியாக விளங்குகிறது என்று பலரும் பாராட்டியிருந்தனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in