பெண்ணைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் மாறவில்லை!- நிதர்சனம் பேசும் ரேவதி, அர்ச்சனா

பெண்ணைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் மாறவில்லை!- நிதர்சனம் பேசும் ரேவதி, அர்ச்சனா

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

இந்தியத் திரையுலகின் இணையற்ற ஆளுமையான பாலு மகேந்திராவின் நினைவாக அவரது சீடர்கள், நண்பர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘அழியாத கோலங்கள்-2’ திரைப்படம், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. எம்.ஆர்.பாரதியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் நாயகிகளான அர்ச்சனா, ரேவதி இரு
வரையும் சந்தித்துப் பேசினேன். இருவரின் பதில்களுக்குப் பின்னால், திரைத் துறையில் கால் நூற்றாண்டாக இவர்கள் பெற்ற அனுபவம் பளிச்சிடுகிறது.

“அழியாத கோலங்கள் 2’ உதித்த புள்ளி எது?” என்று கேட்டதும், “பாலு மகேந்திராதான் அந்தத் தொடக்கப் புள்ளி” என்று ஆரம்பித்தார் அர்ச்சனா.

“பாலு சார் எங்களிடம், ‘நல்ல படம் என்று காலத்துக்கும் சொல்வது மாதிரி ஒரு படம் எடுங்களேன்’ என்று அடிக்கடி சொல்வார். ஒரு நாள் நானும் இயக்குநர் பாரதியும் பேசிக்கொண்டிருந்தபோது, பாலு சார் சொன்ன மாதிரி ஒரு நல்ல படம் எடுத்து அவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அப்படித்தான் இந்தப் படம் உருவானது” என்ற அர்ச்சனாவை அன்புடன் பார்த்துக்கொண்டிருந்த ரேவதி, “இந்தப் படம் உருவானதற்கு எங்கள் எல்லோருக்கும் பாலு சாருடன் இருந்த பொதுவான நட்பும் முக்கியக் காரணம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in