சட்டம் இயற்றும் அவையிலும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும்! - மாநிலங்களவைக்குச் செல்லும் வழக்கறிஞர் வில்சன் பேட்டி

சட்டம் இயற்றும் அவையிலும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும்! - மாநிலங்களவைக்குச் செல்லும் வழக்கறிஞர் வில்சன் பேட்டி

கே.கே.மகேஷ்

திமுகவின் அரசியல் பயணத்தில் நீதிமன்றம் மூலம் களமாடியவர்களில் முக்கியமானவர் வழக்கறிஞர் வில்சன். திமுக கொடியைக் காப்பாற்றிய சட்ட நடவடிக்கை தொடங்கி, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடைக்க நீதிமன்றத்தில் வாதாடியது வரை திமுகவின் முக்கியத் தருணங்களில் தோள்கொடுத்தவர். இப்போது அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்குச் செல்கிறார். டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தவரிடம் அலைபேசியில் ஒரு பேட்டி:

 உங்களது குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்களேன்...

 பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா எஸ்.புஷ்பநாதன் திமுக அபிமானி. டிராவல்ஸ் நடத்திவந்தார். லயோலா கல்லூரியில் படித்தபோது திமுக மாணவர்களோடு இணைந்து செயலாற்றினேன். அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அடிக்கடி மாணவர் போராட்டங்கள் நடக்கும். கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவராக அப்போது கலாநிதி மாறன் இருந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்த பிறகும், போராட்டங்களில் பங்கேற்றேன். என் மனைவி வான்மதி இந்தியன் வங்கியில் பணியாற்றியவர், விருப்ப ஓய்வுபெற்று குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறார். மகன் ரிச்சர்ட்சன் வில்சன் வழக்கறிஞராக இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in