எஸ்.நீலவண்ணன்
ஹாரன்களில் ஒலியும் வாகனங்களின் புழுதியுமாகப் பரபரப்பாக இருக்கும் விழுப்புரம் திரு. வி.க சாலை. அந்தக் காலை வேளையில், அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள நடைபாதையில் உர சாக்கை விரித்து வைத்து, சாலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு கிளி ஜோசியர்.
அருகில், முருகன் படம் ஒட்டிய கிளிக்கூண்டில் இரண்டு கிளிகள், மனிதர்களின் எதிர்காலத்தைக் கணிக்கக் காத்திருக்கின்றன.
அருகில் சென்றதும், நிமிர்ந்துகூட பார்க்காமல், “அப்டி உட்காருங்க” என்கிறார் ஜோசியர்.