விருதுநகருக்கு பாஜக வேட்பாளர் ரெடி

விருதுநகருக்கு பாஜக வேட்பாளர் ரெடி

அடுத்த தேர்தலில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட இப்போதே வேட்பாளரைத் தயார் செய்துகொண்டிருக்கிறது பாஜக. திமுக எம்பி-யான தமிழச்சி தங்கப்பாண்டியனின் கணவர் சந்திரசேகர். இவர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இவரது சகோதரர் மருமகனான செந்தில்குமார் தான், அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் விருதுநகர் வேட்பாளராம். வருமானவரித்துறையில் இணை இயக்குநர் அந்தஸ்தில் பணியில் இருந்த 38 வயதான செந்தில்குமார், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு பாஜகவில் இணைந்தவர். இவரை விருதுநகரில் நிறுத்த முடிவு செய்து, அதற்கான பூர்வாங்கப் பணிகளை சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது பாஜக. செந்தில்குமாரின் களப்பணிக்கு ஏதுவாக, சாதிய அமைப்பு ஒன்றின் கிளைகளை விருதுநகர் மாவட்டத்துக்குள் வலுப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in