ஆழம் புரியவைத்த கதறல்!

ஆழம் புரியவைத்த கதறல்!

தொகுப்பு: தேவா

தீபாவளி கொண்டாட்டத்தைக்கூட மறந்துவிட்டு கடந்த வாரம் நாடே சுஜித்துக்காக கண் கலங்கியது. இல்லம் தொடங்கி இணையம் வரைக்கும் ‘சுஜித் மீண்டு வா’ என்ற கூக்குரல் கேட்டது. மூன்று நாட்களும் செய்திகளில் நேரலை இதுதான். எங்கும் கைகளை மடக்கியபடி குழிக்குள் வீழ்ந்திருக்கும் சுஜித்தின் புகைப்படம்தான். ஏதாவது அதிசயம் நடந்துவிடாதா என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அத்தனை பேரின் வேண்டுதலும், உழைப்பும் முயற்சியும் வீணானது. ஆனால், இனியொரு குழந்தையின் உயிர் இப்படிப் போய்விடக்கூடாது என்று உரைக்கும் அளவுக்கு சுஜித்தின் மரணம் ஆழ்துளைக் கிணறுகளின் ஆழத்தைப் புரிய வைத்துவிட்டது. அதேசமயம் இன்றைய நவீன உலகத்திலும் தொழில்நுட்ப அளவில் எந்த அளவுக்கு நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பதையும் புரியவைத்திருக்கிறது.

இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்!- சவுதியில் நரேந்திர மோடி அழைப்பு

முதலீடு வர்றது இருக்கட்டும்... நீங்க எப்போ இந்தியா வர்றீங்க?- பாலசுப்ரமணி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in