ஓபிஎஸ் மகனுக்கு செக்! - காலை வாரிய ஈபிஎஸ் அணி!

ஓபிஎஸ் மகனுக்கு செக்! - காலை வாரிய ஈபிஎஸ் அணி!

கரு.முத்து
muthu.k@kamadenu.in

மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்காதது அக்கட்சிக்குள் பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராவார் என்று ஆளாளுக்குப் பேசிவந்த நிலையில், கடைசி நேரத்தில் கதையையே மாற்றிவிட்டது ஈபிஎஸ் தரப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்குத் தலா ஒரு அமைச்சர் பதவி என்பது பாஜக எடுத்த கொள்கை முடிவு. இதையடுத்து, அகாலி தளம், சிவசேனை, லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் உற்சாகத்தில் துள்ளின. அதிமுக தரப்பிலோ அத்தனை உற்சாகம் தென்படவில்லை... ஓபிஎஸ் தரப்பைத் தவிர. இந்தக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் குமார். அதனால் அவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற அழுத்தமான நம்பிக்கை ஓபிஎஸ் தரப்புக்கு இருந்தது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in