நிழற்சாலை

நிழற்சாலை

குதூகலம்

யாருமற்ற சாலையில்
தனித்திருக்கும் மரம்
காற்றின் அசைவுக்கெல்லாம்
பூக்களை உதிர்க்கையில்
குழந்தைகளைப் போல்
குதூகலித்து மகிழ்கின்றன
சின்னச்சின்ன சிறகசைப்பில்
பறந்து திரியும் பறவைகள்.
- ச.கோபிநாத்

தல புராணம்

அலைமோதும் கூட்டத்தோடு
இன்று டாஸ்மாக்
இருக்கும் இடத்தில்
முன்பு இருந்தது
ஒரு பெரிய புளிய மரம்.
அதைச் சுற்றி இருந்தது
ஒரு கருங்கல் மேடை.
அங்கே அமர்ந்துதான் நாட்டாமை
எனக்கு அபராதம் விதித்தார்
கள் குடித்ததற்காக!
- வல்லம் தாஜுபால்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in