காற்றடைத்த பை

காற்றடைத்த பை

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

அவர்கள் இருவரும் மீண்டும் வந்திருந்தார்கள். இம்முறையும் நள்ளிரவில்தான் வந்திருந்தார்கள். “இன்னுமா சாகலை?” என்ற அதே கேள்வியைத்தான் இப்போதும் கேட்டார்கள்.

“அவருக்கு இப்ப சாவு வராது. நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னா உங்களைப் பாக்க ஓடிவந்துடுவார். போய்ச் சொல்லட்டுமா?” என்று காப்பாளர் தாமோதரன் கேட்டதும் இருவரும் பதறினார்கள்.

“அய்யோ…வேண்டாம். அவர் பாட்டுக்க எங்ககூட வர்றேன்னு சொல்லிடப்போறார்…” என்றான் வளர்த்தியாக இருந்தவன். “பத்து நாளோ, பதினைஞ்சு நாளோன்னுதானே டாக்டர் சொன்னார்… இப்ப மாசம் நாலு ஓடிப் போச்சே…” என்று இழுத்தான் காதோரம் நரையோடிய நடுத்தர வயதுக்காரன். தாமோதரனுக்குக் கோபம் வந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in