உறுதி குடுங்க... ஓகே பண்றேன்!

உறுதி குடுங்க... ஓகே பண்றேன்!

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை கடந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்த வேளாண் துறை அலுவலர்கள் சங்கத்தினர், தங்களுக்கான துறை சார்ந்த பதவி உயர்வுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தகுதியானவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்தார்களாம். அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், “உங்களுக்குள்ள மூணு சங்கம் இருக்கீங்க. அதுல சில பேரு, பதவி உயர்வு வாங்கித் தர்றதா சொல்லி பணம் வசூல் பண்ணிருக்கறதா புகார்கள் வந்துச்சு. அதனால தான் அந்த ஃபைலை நான் நிறுத்தி வெச்சிருக்கேன். மூன்று சங்கத்து நிர்வாகிகளும் நேர்ல வந்து, ‘நாங்க யாருக்கிட்டயும் பதவி உயர்வுக்காக பணம் வசூலிக்கல’னு உறுதி குடுங்க. நாளைக்கே சிஎம் கிட்ட சொல்லி உங்க கோரிக்கையக் கவனிக்க வைக்கிறேன்” என்று சொல்லி, வந்தவர்களை வாயடைக்க வைத்துவிட்டாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in