என்றும் வாடாத புரட்சிப் பூமரம்!

என்றும் வாடாத புரட்சிப் பூமரம்!

என்.சுவாமிநாதன்

அந்த மழை நாளில் அரசியல் புள்ளிகளாலும் மக்களாலும் நிரம்பியிருக்கிறது ஆலப்புழையில் உள்ள அரங்கம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் வந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் உம்மன் சாண்டி,

அச்சுதானந்தன், பாஜக விஐபி கும்மனம் ராஜசேகரன் என்று கட்சி வேறுபாடின்றி வந்திருக்கும் தலைவர்களின் முகங்களில் அத்தனை களிப்பு. இந்த நிகழ்ச்சிக்

காகவே அன்று கேரள சட்டமன்றத்துக்கு சிறப்பு விடுப்பும் அளிக்கப்பட்டிருந்தது. அப்படி என்ன விசேஷமான நிகழ்ச்சி அது என்கிறீர்களா? ‘கெளரியம்மா’ என்றும் ‘குஞ்சம்மா’ என்றும் கேரளத்தவர்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.ஆர்.கெளரியின் 100-வது பிறந்தநாள் கொண்டாட்டம் அது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in