கரு.முத்து
muthu.k@kamadenu.in
புதுவையில் முப்பதாண்டுகளுக்குப் பிறகு, ஏழாவது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்திருக்கிறது. அடுத்ததாக தங்கள் தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும் என்ற அஜெண்டாவுடன் பாய்ச்சல் காட்டத் தொடங்கி இருக்கிறது பாஜக.
ஒதுங்கிக்கொண்ட கட்சிகள்
எம்எல்ஏ-க்கள் ஆறு பேர் பதவி விலகியதையடுத்து நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து பதவி விலகியது. இதைத் தொடர்ந்து இடைக்கால ஆட்சியை அமைக்க எந்தக் கட்சியும் முன்வராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப் பரிந்துரைத்தார் துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன்.