அலறித் துடித்த யானை... அடித்துத் துன்புறுத்திய பாகன்கள்!- காணொலியால் வெளிச்சத்துக்கு வந்த வெறித்தனம்

அலறித் துடித்த யானை... அடித்துத் துன்புறுத்திய பாகன்கள்!- காணொலியால் வெளிச்சத்துக்கு வந்த வெறித்தனம்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

சமீபகாலமாக, யானைகள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களுக்குக் கண்கண்ட சாட்சியமாக இருக்கின்றன சமூக வலைதளங்களில் வெளியாகும் காணொலிப் பதிவுகள். கேரளத்தின் வயநாடு பகுதியில் ஒரு காட்டு யானைக்கு, சில விஷமிகள் பழத்தில் வெடியை வைத்து தின்னச் செய்து படுகொலை செய்த சம்பவம்; சமீபத்தில் நீலகிரி மாவனல்லாவில், விடுதி வீட்டுக்காரர்கள் எரியும் சாக்குகளைக் காட்டு யானை மீது வீசி அதன் மரணத்துக்கு வித்திட்ட சம்பவம் எனப் பல கொடுமைகள் காணொலிப் பதிவுகளாக வெளியான பின்னர்தான், சமூகத்தின் மனசாட்சி உலுக்கப்பட்டது. தொடர்புடையோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அந்த வரிசையில், சமீபத்தில் யானைகள் நலவாழ்வு முகாமில் பராமரிக்கப்படும் கோயில் யானை ஒன்று கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவமும் காணொலி மூலமாகத்தான் சமூகத்தின் பார்வைக்கு வந்திருக்கிறது. பாகன்களால் இரக்கமின்றி தாக்கப்பட்டு அலறித் துடித்த யானையைக் கண்டு பதறாதவர்களே இல்லை எனலாம்!

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in