கவுண்டர் Vs முக்குலத்தோர் அரசியல்!- சசிகலாவுக்கு மகன் விடு தூது அனுப்புகிறாரா ஓபிஎஸ்?

கவுண்டர் Vs முக்குலத்தோர் அரசியல்!- சசிகலாவுக்கு மகன் விடு தூது அனுப்புகிறாரா ஓபிஎஸ்?

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

‘தங்கத்தமிழ் மகன் ஓபிஎஸ்', ‘முதல்வன் ஓபிஎஸ்' என்று தினந்தினம் விளம்பர வீடியோக்களைப் பதிவேற்றி தன்னுடைய தந்தையும் முதல்வர் போட்டியில் இருக்கிறார் என்று காட்டிக்கொண்டிருந்தவர் வி.ப.ஜெயபிரதீப். ஓபிஎஸ்ஸின் இளையமகனான இவர், திடீரென சசிகலாவுக்கு வாழ்த்துச் சொல்லி வெளியிட்ட அறிக்கை தமிழக அரசியல் களத்தை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
‘மதிப்புக்குரிய அம்மையார் திருமதி. சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து, அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மனநிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!' என்பதுதான் அந்த வாழ்த்து மடலின் சாரம்.

“அம்மாவின் மரணத்துக்கே சசிகலா குடும்பத்தினர் தான் காரணம்” என்று குற்றம் சாட்டியதோடு நில்லாமல், ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பதற்கும் காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அப்படியிருக்கையில் அவரது வீட்டுக்குள் இருந்து இப்போது ஏன் இந்தத் திடீர் வாழ்த்து? விசாரணையில் இறங்கினோம்.

யார் இந்த ஜெயபிரதீப்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in