சக்கரநாற்காலியில் ஒரு நர்ஸ்

சக்கரநாற்காலியில் ஒரு நர்ஸ்

எஸ்.சுஜாதா
sujatha.s@hindutamil.co.in

படிப்பும் பயிற்சியும் இருந்தும் இரண்டு ஆண்டுகளாகச் செவிலியர் வேலை கிடைக்காமல் தவித்த இளம் பெண்ணுக்கு இப்போது வேலை கிடைத்திருப்பது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சக்கரநாற்காலியில் வாழ்பவர் என்பதுதான் இந்த நெகிழ்ச்சிக்குக் காரணம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ரையான் க்ரெஸுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் உட்பட புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே ஆசை. நடனக் கலைஞராக வேண்டும் எனும் ஆசையும் இருந்தது. ஆனால், 16 வயதில் அவரின் ஆசை, லட்சியங்களையெல்லாம் நொறுக்கியது மரபணுக்குறைபாடு நோய் (Ehlers-Danlos syndrome). இதன் மூலம் உடலில் உள்ள இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்பட்டன.

ஒரு நாளைக்கு நூறு முறை ரையானின் தோள்பட்டைகள் நகர்ந்துவிடும். வளர வளர நோயின் தீவிரமும் அதிகமாகிக்கொண்டே சென்றது. தோள்பட்டை, இடுப்பு, மூட்டு போன்ற இடங்களில் வலு குறைந்து நகர ஆரம்பித்தது. இதனால் ஊன்றுகோலின் உதவி தேவைப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in